சனி, 19 செப்டம்பர், 2009

ஆரோக்கிய டிப்ஸ்,இனிய இல்லம் (சுட்டதுதான் கோபபடாதீங்க)

40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

ஆண்களும் சரி பெண்களும் சரி 40 வயதை தாண்டிய பின்பு உடலில் சில மாற்றங்கள் வரும். உடல் தளர ஆரம்பிக்கும். இந்த வயதில் சில டெஸ்டுகள் செய்து கொண்டால் பல நோய்களின் ஆரம்ப நிலையிலே தெரிந்து அதனை சரி செய்து பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.

பிஸிக்கல் எக்ஸமினேஷன் மூலமாக தைராய்டு டெஸ்ட், மார்பக புற்று நோய் கண்டறியலாம்.

பாப் ஸ்மியர் டெஸ்ட் மூலம் கர்ப்பப்பையில் தோன்றும் ஆரம்ப கால கேன்சர் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். இந்த நோய் அதிகமாக பெண்களுக்கு வருவதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்வது நலம்.

இரத்த டெஸ்ட் மூலம் இரும்பு சத்து குறைவு, தைராய்டு பிரச்சனை, டயாபடீஸ் இருக்கானு டெஸ்ட் செய்யலாம்.

யூரின் டெஸ்ட் டயபடீஸ், யூரினரி இன்பெக்க்ஷன்,சால்ட் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம்.

மேஷன் டெஸ்ட் இந்த டெஸ்டின் மூலமாக "ப்ரோசைட்டிக்கில்" இன்பெக்க்ஷன் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம். அதோடு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்
வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.




இசிஜி
இரத்த குழாய் அடைப்பு, ஹார்ட் அட்டாக் வரவாய்புகள் இந்த வயதில் அதிகம் அதனால் இந்த டெஸ்ட் செய்தால் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கானு தெரிந்து முன்னேச்சரிக்கையாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் பரிசோதனை
தவறான உணவு பழக்கங்களால் இந்த நோய் வர வாய்பிருக்கு. உடலில் தேவையில்லாத கொழுப்புகள் இருப்பது தெரிந்துவிடும். பிறகு நாம் டயட், எக்ஸர்சைஸ் மூலமாக சரி செய்துவிடலாம்.

இது தவிர கண்கள்,பற்களையும், பி.பி செக் அப்டெஸ்ட் செய்வது நலம்

மேலே சொன்ன டெஸ்டுகள் மூலம் நாம் ஓரளவு நம் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடித்து சுலபமாக குணப்படுத்திவிடலாம்.


உடல் நலம் வெங்காயம் சாப்பிடவும்:

நம் நாட்டு சமையலில் முக்கியமான பொருளாக அதிக உணவில் சேர்ப்பது வெங்காயம் தான்.

வெங்காயத்தில் பல நல்ல மருத்துவ குணங்கள் இருக்கிறது.

வெங்காயம் மிகச் சிறந்த கிருமி நாசினி.
இதனை 3 நிமிடங்கள் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி,ரத்தம் உறைதல், ரத்த அடைப்பு ஆகியவற்றை நீக்கி ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது.

பொறித்த சிக்கன் உணவுகளுடனும் மற்றும் நான் - வெஜ் அயிட்டங்களுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் உடலின் ஜீரன சக்கிதியினை தரும்.




பித்ததால் வரும் தலைச்சுற்றல், வாதம், ஈரல் கோளாறுகள், இரத்த சோகை பேன்றவற்றிற்க்கு வெங்காயம் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

மூல வியாதியால் அவதி படுபவர்கள் வெங்காயத்தை சிறிது நெயில் வதக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயத்தில் புரதம், பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் இருக்கிறது.

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் கூடுதல் சக்தி உள்ளது

மின்சார சிக்கனம்
இன்றைய காலகட்டத்தில் மின்சாரத்தையே காணம், மின்சார சிக்கனம் பற்றி எழுதவந்துடாங்க என்று தானே நினைக்கிறிங்க.
இருந்தாலும் நம்மால் முடிந்தவரை சிக்கனமாக இருந்தால் நம்ம மாத வருமானத்தில் மிச்சம் பிடிக்கலாமுல..

வீட்டில் 3 ரூமிருந்தால் எல்லா நேரமும் தனி தனியாக ரூம்மில் இருக்காமல், அனைவரும் ஒன்றாய் ஒரே ரூம்மில் இருங்க. மிக முக்கிய தேவைக்கு மட்டுமே தனியாக இருங்கள்.
சில வீடுகளில் அடுப்படி மற்றும் பூஜை ரூமில் மாலை நேரங்களில் கட்டாயம் லைட் எரியனும் என்று சொல்லூவங்க. நீங்கள் பயன் படுத்தாத அந்த நேரங்களில் 0 வாட்ஸ் பல்பை போட்டு வைக்கவும்.
வீட்டில் பாத்ரூமில், டாய்லெட்டுகளில் 40 வாட்ஸ் அல்லது 60 வாட்ஸ் குண்டு பல்பு போட்டுவாங்க அதனை எடுத்துவிட்டு மின்சார சிக்கனம் தரும் சின்ன டியூப் லைட்டை போடவும். (பாத்ரூம் போயிட்டு வந்தவுடன் மறக்காமல் லைட்டை ஆப் செய்யவும்)
இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்கும் பொழுது டேபிள் லேப்பை பயன்படுத்தலாம்.
அடுப்படியில் மிக்ஸி, கிரைண்டர் எல்லாவற்ரையும் தேவைக்கு பயன்படுத்துங்கள். இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய்விழுது எல்லாம் மொத்தமாக 1வாரத்துக்கு அரைத்து ஃப்ரிஜில் வைத்து பயன்படுத்தவும்.


ஏஸி யினை இரவு முழுவதும் ஓடவிடாமல் 3 மணிநேரம் ஓடவிட்டு பின்பு பேனை போட்டுவிடவும்.
ஏஸி ஆன்னாகியிருக்கும் பொழுது கட்டாயம் ரூம்மை அடைத்தே வைக்கவும். அடிக்கடி திறந்து வெளியே போனால் ஏஸி ரூம்மில் இருக்காது. பவர் செலவு அதிகமாகும்.
இதனை போல் ஏஸி யை 26 டிகிரியில் வைக்கவும். அப்பொழுது தான் மின்சாரம் கம்மியாக இழுக்கும்.
ஃபிரிஜை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்கவும். தேவையான பொருட்களை முழுதும் ஒரே நேரத்தில் எடுத்து வைக்க பழகவும்.
ஹீட்டரை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும். சிலர் ஆன் செய்துவிட்டு மறந்துவிடுவாங்க. அது போல் ஒரு வாளி தண்ணிருக்கு 1 மண்நேரம் ஆன் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள்.
மின்சார பொருட்கள் வாங்கும் பொழுது நல்ல கம்பெணி பொருட்களை மட்டுமே பார்த்துவாங்கவும்.
வீட்டில் அதிகவெளிச்சம் வேண்டும் என்று மெர்குரி பல்லை போடாதிங்க. பவர் அதிகமாக இழுக்கும்.
கம்ப்யூட்டரின் மானிட்டரை தேவைக்கு மட்டுமே ஆன் செய்யுங்கள்.
இதனை போல் முடிந்த வரை சிக்கனமாக இருந்தால் நிச்சயம் மாதம் 200 ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.




திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)

பல பெண்களுக்கு அதிகமாக முதுகு வலியால் அவதி படுறாங்க.. என்ன காரணம் என்று தெரியாமலே கண்ட கண்ட மாத்திரையினை போடுவாங்க. அந்த நேரத்தில் மட்டுமே சரியாகும் ஆனால் மீண்டும் வந்து தொல்லை தரும்.
அதற்க்கு காரணம் என்வென்று ஒரு குழு ஆராய்ந்தாங்க..

இந்தியாவில் 80% பெண்களுக்கு தம்பத்தியத்தில் முழுமையான இன்பம் பெறவில்லை என்றும் அதற்கு அவர்களின் வேலை பளூவும், மற்றும் ஆண்களின் அவசரமும் இதற்கு முக்கிய காரணம். இதனால் பெண்களுக்கு திருப்தி இல்லாமால் போகிறது என்று காரணம் சொல்லுறாங்க.


இது போல் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும் வீட்டுக்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து போய் தூங்கினால் போதும் என்று நினைக்கிறாங்க.. ஆகையால் பல நாட்கள் தம்பதியத்தில் ஈடுபடுவதில்லை. எப்போ ஒரு முறை சேர்வதால் இந்த வலி ஏற்படுகிறது.
இது தவிர ஹை- ஹீல்ஸ் போடுவதாலும் முதுகு வலி ஏற்படும்.

இதற்கு ஓரே தீர்வு பெண்கள் கணவரிடம் அன்பாய் ஆதரவாய் பேசி அவங்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கவும். வேலையில் இருந்து வந்தவுடன் அதிக தொல்லை கொடுக்காமல் சந்தோஷமாக சிரித்து பேசுகள். ஏதோ கல்யாணம் முடிந்தது ஏதோ இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயத்தில் கடமைக்கு கணவருடன் சேர வேண்டாம். பிறகு முதுகு வலியால் கஷ்டபட வேண்டாம்.
தொடர்ந்து அதிக முதுகு வலியிருந்தால் மருத்துவரை அனுகி தீர்வு காணவும்.

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு
(குழந்தை பிறப்பை தள்ளிப் போடுபவரா நீங்கள்..?)

திருமணம் ஆன புதுமண தம்பதியர்களுக்கு வாழ்க்கை இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்..


திருமண வாழ்க்கை இனிமையாக இருக்குது என்பதை அடையாளம் காட்டுவது முதலில் வரும் குழந்தைச் செல்வம் தான்.
ஆனால் சில புதுமண தம்பதியர்கள் நாங்க சந்தோஷமாக இருக்கோம் இப்ப இடையூராக குழந்தை வேண்டாம் என்றும், ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக்கொள்ளனும், அப்பறம் நல்ல சம்பாதிக்கனும், லைப்பில் உயர்ந்து இருக்கனும் என்று சப்ப காரணம் சொல்லி குழந்தை செல்வத்தை தள்ளி போடுறாங்க.
முக்கியமன காரணம் என்றால் அதிகமாக ஒருவருடம் தள்ளி போடுங்க. அதுவும் மருத்துவரின் ஆலோசனை படிதான். (ஆனால் மருந்துகளையும், ஊசியினையும் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து) (குழந்தை உண்டானால் அபாஷன் செய்ய வேண்டாம்.)


30-35 வயதுக்குள்ளே குழந்தை பெற்று முடித்துக் கொள்வது நல்லது. இந்த வயதில் தான் பெண்களின் உடல் நிலை சிறாகவும், கருமுட்டையின் வளர்ச்சியிருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து நார்மல் டெலிவரியாகும்
நாள் செல்ல செல்ல உடல் நிலைகள் மாறிவிடும். வயதும் ஏறிவிடும். குழந்தையினை பார்ப்பதில் சிரமம் ஆகிவிடும்.



குழந்தையாக இருக்கும் பொழுதுக்கூட நமக்கு ஒன்றும் தெரியாது குழந்தை பெரியவங்களாக ஆனபின்பு படிக்கும் பொழுதும் திருமணம் ஆகும் பொழுதும் நாம் அப்பா அம்மா மாதிரி இருக்க மாட்டோம் தாத்தா, பாட்டி போல் ஆகிவிடுவோம் அவங்களுக்கு நம்மால் ஏதுவும் உதவி செய்யமுடியாத நிலையாகும்.. (பேரன் ,பேத்திகளை யாரு பார்ப்பார்கள்..?) இதனால் தலைமுறை இடைவெளியாகிவிடும்.
வயது ஏறிய பின்பு குழந்தை பிறப்பதால் தாயுக்கும் ,சேய்யுக்கும் நிறைய உடல் உபாதைகள் ஏற்ப்படும்.
சிலருக்கு குழந்தை பிறப்பதிலே பிரச்சனைகள் வரலாம்.இதானால் நாள் போக போக கணவர் மனைவிக்குள் பிரச்சனைகள் வரலாம். மன கஷப்புகள் ஏற்படலாம்.
கடவுளின் அருள் குழந்தை வரம் அதனை அவன் தரும் பொழுது வாங்கிக்கொள்ளவும். நாம் தேடுகிற நேரத்தில் நமக்கு கிடைக்காமல் போய்விடும். ஆகையால் சரியான வயதில் குழந்தை பெற்று உங்கள் குழந்தைகளை அழகாக சந்தோஷமாக வளருங்கள்.
உங்கள் வயதான காலத்தில் உங்கள் குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில் இருப்பாங்க.அவங்க உங்களை பார்ப்பாங்க நீங்கள் பேரன் பேத்தியுடன் சந்தோஷமாக இருங்கள்..

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!(பகுதி 1)
நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை
மட்டுமே உள்ளது என்பதை
மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS) சொல்கிறார். இங்கே
உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார்கள்

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண
டெஸ்டில் தெரிய வராது, அவை
சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்
சிகிச்சைக்குப் பின், டாக்டர்
நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான
அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்
உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான
செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக
இருக்கும்போது கேன்சருக்கான செல்
அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்
(tumors) ஏற்படுவதற்கான
வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து
குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு
மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து
குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான
சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை
மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை
போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்
குடல், கிட்னி, இதயம்,
மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான
செல்கள், உறுப்புகள்,
திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்
(tumor) அளவைக் குறைக்க
செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை
கேன்சர் கட்டியினை அழிக்க
பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு
மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது
அழிக்கப் பட்துவிடும். இதனால்
மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்
எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்
அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்
மற்ற இடங்களில் பரவ ஒரு
காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்
பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை
நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக
நேரமும் எடுத்துக்
கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.
ஜீரணமாகாத இறைச்சியானது
குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே
இறைச்சி சாப்பிடுவதை
தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது
சக்தியை கேன்சர் செல்லின்
கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer
cells) கேன்சர் செல்லை
அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs
etc, போன்றவை
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's
own killer cells) மூலம்
கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள
பாதிக்கப்பட்ட, தேவையற்ற
செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like
vitamin E are known to
cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing
of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)
நோயே! நேர்மறையான,
ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை
அளிக்கிறது. கோபம், மன்னிக்கும்
மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்
அமிலத்தன்மையையும்
அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,
ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,
வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.
தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த
சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.
மூச்சுப் பயிற்சியானது
(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
ஆன்மையினை அதிகரிக்கும் முருங்கைக்கீரை:
இது தெரிந்த விஷயம் தானே என்று சொல்லுரிங்க. இதில் இருக்கும் மருத்துவ சக்தியினை பற்றி பலருக்கு தெரியாது..

இயற்கையால் வழங்கப்பட்ட ஊட்டப்பொருள் நிரம்பப்பட்டது தான் இந்த இலையும், காயும்.

முருங்கையின் இலை, காய், வேர், பூ, பட்டை இதில் உள்ள அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் சாறு உயிர் அனுவை விருத்தி செய்யக்கூடியது.

மருத்துவ குணங்கள்:
இந்த கீரையினை சாறை அதிகமாக சேர்த்துக்கொண்டால் ஆரம்ப நிலையில் இருக்கும் வாத நோய் குணமாகும்.
கண்களுக்கு மிகுந்த குளிர்சியும், தெளிவையும் தரும்.
இதன் சாரு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் குறைக்கும்.
இதன் பிஞ்சிக்காய் குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து.
முருங்கை பூவினை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் ஏற்ப்படும் பலவினம் போகும்.
இதன் பட்டை மற்றும் வேரில் சுவாசம், வீக்கம்,கல்லீரல்,வாதம்,பக்கவாதம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகிறது.
இந்த கீரையில் உயிர் சத்துக்களும், தாது உப்புகளும், நமக்கு தேவையான அமினா ஆசிடும் இதில் இருக்கு.



ரத்த சோகைக்கு (அனிமியா)
கால் கப் முருங்கை இலை சாறுடன் 1 கப் இளநீர் கொஞ்சம் தேனும் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடவும்.
கண்புறை சரியாக:
கால் கப் முருங்கையிலை சாறு 1ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை தினமும் சாப்பிடவும்.
பித்த சோகை:
குழந்தைகளுக்கு முருங்கைகீரையுடன் சிறுது பசு நெய் ஊற்றி வேக வைத்து தினமும் கொடுக்கவும்.
சர்க்கரை நோய்காரங்களுக்கு:
தினமும் ஏதாவது ஒரு வகையில் பூ,காய்,பட்டை,சாறு என்று உணவில் சேர்த்துக்கொள்ளவும். சர்க்கரையின் அளவு குறையும்.
நீர்கடுப்புக்கு:
கேரட் சாறு 25மில்லி,முருங்கையிலை சாரு இரண்டையும் கலந்து குடிக்கவும். உடல் தாகமும் அடங்கும் நீர்கடுப்புக்கும் நல்லது.


ஆன்மையினை தூண்டும்:
குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் (உடல் நிலையில் வேறு பிரச்சனையில்லாமல் இருப்பவர்கள்) தினமும் முருங்கைகீரை, காய், என்று உணவில் சேர்த்துக்கொண்டால் ஆன்மை சக்து உண்டாகும்.
காய்ந்த முருங்கவிதையினை தூளாக்கி இரவில் பாலுடன் சிறிது கலந்துக் குடிக்கவும்.
தோல் நீக்கிய முருங்கை விதையினை பாலில் போட்டு வேக வைத்து தேன் கலந்து சாப்பிடனும்.
பிபி குறைய:
காலையில் முருங்கைச்சாறு குடித்தால் குணம் கிடைக்கும்.
தாய்ப்பால் பெருக:
முருங்கைகீரை, தேங்காய்ப்பூ சேர்த்து சமைத்து அதிகமாக சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.
இதில் இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. ஆகையல் எப்படியாவது வீட்டில் சொல்லி தினமும் உணவில் இந்த முருங்கை குடும்பத்தை சேர்த்து சாப்பிடுங்கள். நோயில்லாமல் நீண்டு வாழ்க





இரத்த சோகை சரியாக:

சில பெண்களுக்கு இரத்த சோகை இருக்கும் அதனை சரி செய்ய இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடவும்.
தேன், பேரிச்சம் பழம் கலந்து சாப்பிடவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்து ஜீஸ் சாப்பிடவும்.
அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து தினமும் குடிக்கவும்.
ஆட்டு ஈரல், சவரொட்டி அதிகமாக உணவில் சேர்க்கவும்.
கேரட் ஜீஸ் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.

சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள்:



இன்றைய காலகட்டத்தில் சத்தான உணவு சாப்பிடுவதன் மூலமே மட்டுமே நாம் நேய்கள் வராமல் காக்க முடியும்.
இரவு பகல் என்று வேலை அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேர இடைவெள்யில் கட்டாயம் உணவினை சாப்பிடவும்.
காலை உணவில் அதிகமாக காரமணி கடலை, உளுந்து, தட்டை பயிறு, மொச்சை, எள், துவரை, சுக்கு, மிளகு, கடுகு, வெங்காயாம் போன்ற உணவுகளை சேர்க்கவும்.
மதிய உணவில் கிழங்கு வகைகள், தானிய வகைகள், கீரைவகைகள், பச்சைகாய்கறிகள், மோர், தயிர், வெண்ணெய், நெய் சேர்த்து செய்யவும்.
இரவு உணவில் காய்கறிகள், மற்றும் பழங்கள், பால் சேர்த்து சாப்பிடவும்.
இப்படி சாப்பிட்டால் நோய் நெடியில்லாம் வாழலாம்.

வெயிலுக்கு ஏற்ற பானம்


வெயில் அதிகமாக இருப்பதால் நாம் சாப்பிடும் உணவுகளில் தயிர் மோர் அதிகம் சேர்க்கவும்।
தயிருடன் சிறிது இஞ்சி, உப்பு கலந்து மிக்ஸியில் அரைத்து குடிக்கவும்।
தயிர் தண்ணீர், உப்பு போட்டு நன்றாக கலந்துபின்பு புதினா,கொத்தமல்லியினை அரைத்து இதனுடன் கலந்து அதனுடன் மிளகு சேர்த்து குடிக்கவும்। குளூமையாக இருக்கும்।
தயிருடன் வெள்ளரிக்காயினை தோல் நீக்கி சிறு சிறு துண்டாக்கி போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு உப்பு கலந்து குடித்தால் சுவையாக இருக்கும்।
தயிருடன் 2கப் தண்ணீர் சேர்த்து சீனி, ஐஸ் கட்டி சேர்த்து மிக்ஸியில் அரைத்து லஸ்சியாக குடிக்கவும்।
தண்ணீரில் தனியா தட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதில் சர்க்கரை பால் சேர்த்து வடிகட்டி டீக்கு பதிலாக குடிக்கலாம்।
பிரசவத்துக்கு பின்


ஆரோக்கியமாக குழந்தை பெற்ற பின்பு எல்லா பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிக பெரிய பிரச்சனை தழும்புகள் தான்॥


இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது ஆனால் நிச்சயம் கம்மி பண்ண முடியும்। அது போல் முதுகு,கால் வலிகள், வயிறு விரிதல் என்று பல பிரச்சனைகள் அதிகம் வரும்।


10மாதம் வயிற்றில் சுமந்து வெளிவரும் பொழுது வயிற்று பகுதிகளின் தசைகள், இடுப்பு எலும்புகள் விரிந்து பிரசவம் சுலபமாக இருக்கும்। இதனால் மேல் சொன்ன பாதிப்புகள் வரும் இது இயல்பு தான்।


அதற்க்கு குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயில், அல்லது ஃப்ரேஜ் ஆயிலை அடி வயிறு கால் தொடைகளில் தேய்க்கவும்। கொஞ்ச நேரம் கழித்து வெது வெதுப்பான நீரை ஊற்றி குளிக்கவும்। (மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு ஆயில் தடவவும்)


இதோடு விட்டு விடாமல் குழந்தை பிறந்த பின்பும் அப்படியே 3மாதம் தொடர்ந்து செய்யுங்கள்।


தண்ணீர் ஊற்றும் பொழுது கட்டாயம் நல்ல சூடாக தண்ணீர் இருக்கனும்। இதில் ஆயூர் வேதிக் குளியல் பொடியும் கலந்து குளிக்கலாம்। இதன் மூலம் பெண்களுக்கு ஏற்ப்படும் உடல் அரிப்புகள் குறையும்।
தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும்।
இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும்। இதன் மூலம் வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோகியம் அதிகமாகும்।
You might also like:
சின்ன குழந்தைகளுக்கு படிப்பு முதல் முதலாக கொலு வைக்கப்போறீங்களா? குழந்தைகளுக்கு தனி அறை: LinkWithin Posted by Mrs.Faizakader at 10:27 AM 4 comments
Labels: ஆரோக்கிய டிப்ஸ், பெண்கள் பகுதி Wednesday, May 20, 2009
வாஞ்ஜையுடன் வாஞ்ஜூர் அவர்கள் கூறிய பூண்டின் மருத்துவ குணங்கள்

இதையும் இணைதுக் கொள்ளுங்கள்।
1 .பூண்டையும் உப்பையும் சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல்சரிவு குணப்படும்.
2 காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.
3 பூண்டு சாறினை வலிப்புவருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
4 இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.
5 டான்ஸில் என்கிறஉள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள்-அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டுசாறினை தடவி குணம் கிடைக்கும்.
6 பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
7 பூண்டில் பலவித மானசத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாகசமையலில் பயன் படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
8 பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.9 பூச்சிக்கடி, உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.
10 பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
11 வெள்ளைப்பூண்டை தினமும்சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.12 பூண்டு சாப்பாட்டின் வாய் துர் நாற்றம் இருப்பது உண்மை. எனவே பூண்டை தவிர்க்காதீர்கள். பூண்டை சாப்பிட்டவுடன்கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
13 சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள். சளி போயே போச்சு.
14 வெள்ளைப் பூண்டைபாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.
15 பூண்டு கொஞ்சம் எடுத்துஅதே அளவிற்கு வெற்றிலையும் வைத்துச் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசிவைத்திருந்து நன்கு ஊறவிட்டுக் கழுவிவிட்டு, மறுபடியும் போட வேண்டும். மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்தே விடும்.
16 பூண்டை உணவில் அதிகம்சேர்ப்பவர்களுக்கு, மலேரியா நோய் வராத
17 வெள்ளைப்பூண்டை உணவில்சேர்த்தால் கொழுப்பு குறையும்.
18 கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலை, 4 வெள்ளைப்பூண்டுத் துண்டைச் சாப்பிடலாம
19 பூண்டு பல மருத்துவநன்மை கொண்டு இருப்பினும்கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.



பூண்டு சாப்பிடுங்க
சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் ஆம்மாப்பா ஆம்மாம் என்று சொல்லுறிங்களா? அப்ப தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்க.
நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம், மலச் சிக்கல் போன்றவற்றுக்கும் பூண்டு நல்ல மருந்து
பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் அதற்கு உள்ளதாம்.
குடல் வாயு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.
பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
ஆயில் உணவில் அதிகம் உபயோகித்தால் உங்கள் ஆயுள் குறையும்.
உணவில் அதிகமாக ஆயில் சேர்த்தால் சுவை கூடும் என்று நம் குடும்ப தலைவிகள் அதிகமாக ஆயில் சேர்த்து குடும்ப ஆயுளை குறைத்துக்கொண்டு இருக்காங்க.

ஆரோக்கியமானது ஆலிவ் எண்ணெய் தான் என்று வருமானத்துக்கு மிஞ்சி வாங்கவும் முடியாது.உணவில் எண்ணெய் இல்லாமலும் நம்மாள் சமையல் செய்யமுடியாது. ஆனால் அதன் அளவை கம்மி பண்ணமுடியும்


டீ.வி விளம்பரத்தில் மயங்கி கண்ட எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம். ஆரோக்கியமான ஆயிலை தேர்வு செய்து அதனை உபயோகிக்கவும்.
மாதம் 4 நபர் இருக்கும் குடும்பத்துக்கு 2லிட்டர் எண்ணெய் போதுமானது.
காலை டிபன் முடிந்த வரை வேக வைத்த உணவுகள் புட்டு, இடியப்பம், இட்லி, பயிறு வகைகளை சாப்பிடவும். இதன் ஷைடுடிஷ் எண்ணெய் குறைவாக இருக்கட்டும். சாலட் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்


எண்ணெயினை சிலர் தூக்கில் அல்லது எண்ணெய் கேனில் ஊற்றி வைப்பாங்க. அப்படி வைத்து பயன்படுத்தும் பொழுது நேரடியாக அப்படியே சட்டியில் எண்ணெய் ஊற்றாமல் ஒரு கரண்டியில் எடுத்து தேவைக்கு தகுந்தது போல் ஊற்றவும்.
தோசை செய்யும் பொழுது எண்ணெயினை சுற்றி வர ஊற்றினால் ஆயில் அதிகமாகிவிடும். அதர்க்கு பதில் ஒரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வைத்து வெங்காயத்தினை முக்கி தோசைகல்லில் தேய்த்து பின்பு தோசை மாவு ஊற்றினால் சுவையும் அதிகமாக இருக்கும். அதிக எண்ணெயும் நம் உடலுக்குள் சேராது.
சப்பாத்தி சூடும் பொழுது எண்ணெயினை பயன்படுத்த வேண்டாம். சுக்கா சப்பாத்தியாக சாப்பிடலாம்.
பால்,மோர்,தயிர்,கீரை,காய்கறிகள் போன்றா உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.



சிக்கன் சமைக்கும் பொழுது குறைவாகவே எண்ணெய் சேர்க்கவும். சிக்கனில் இருந்தே நிறைய எண்ணெய் சமைக்கும் பொழுது வெளியாகும்.
மட்டன், பிரியாணி சமைக்கும் பொழுது நெய் அதிகம் சேர்த்தால் சுவை குறைந்து திகட்டிவிடும்.
சிக்கன்,மீன்,மட்டன்,பஜ்ஜி,பக்கோடா என்று டீப் ப்ரை செய்யாமல் அதர்க்கு பதில் அதிக எண்ணெய் இல்லாத தந்தூரி,கிரில் ஐயிட்டங்கள் சாப்பிடலாம்.

எண்ணெய்,நெய் அதிகமாக சேர்த்தால் இரத்தக் குழாய்களில் அடைப்புஏற்பட்டு ஹார்ட் அட்டாக் வரக்கூடும். இன்னும் பல நோய்கள் வரும் ஆகையால் நம்மால் முடிந்த வரை எண்ணெய் உணவுகளை ஓரமாக வைக்கவும்.
எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பின்பு கையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பினை போக்க சோப்பு போட்டு அலசினால் போகும்.
நம் உடலுக்குள் போகும் அந்த எண்ணெய் பிசுக்கை போக்க என்ன செய்யமுடியும்..?





ஹோட்டலில் உணவு சாப்பிடுபவரா நீங்கள்..?
இன்றைய நவநாகரிக உலகில் பெரிய பெரிய ஹோட்டலில் உணவு சாப்பிடுவது,சின்ன பார்ட்டி என்றாலும் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து அதனை ருசித்து சாப்பிடுவதும் இன்று கட்டாயம்மாகிய ஒன்றாகிவிட்டது.
வாரம் ஒரு நாள் வீட்டு பெண்களுக்கு ஓய்வு வேண்டும் என்று ரெஸ்டாரட் போகிறோம்.
இப்படி போவது ஒன்றும் தவறில்லை. அதில் கொஞ்சம் கவணமாக இருப்பது மிக முக்கியம் அல்லவா?


ஹோட்டல் போகும் முன்பு கவணிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:
நாம் தேர்வு செய்கின்ற ஹோட்டல் தரமானதாக இருப்பது மிக முக்கியம்.
அங்கு செய்கின்ற உணவு பண்டங்கள் தரமான எண்ணெயில் தயாரிக்கிறார்களா என்று முதலில் பாருங்கள். தரமில்லாத எண்ணெயில் செய்த உணவுகள் மூலம் வயிற்றில் கோளாறுகள் வரலாம்.
ஹோட்டல் உணவில் கண்களை கவரும் கலர் கலர் உணவு பொருட்கள் மற்றும் ருசியினை கூட்ட ஏதாவது கெமிக்கல் பொருட்களை கலந்து செய்வார்கள் அதில் நாம் மயங்கிவிடாமல் பார்த்து உணவுகளை ஆர்டர் செய்யவும்.
இந்த கெமிக்கல் மூலம் நம் உடலில் உள்ள கால்சியம் சத்து குறைந்துவிடும்.


உணவுகள் ஆர்டர் செய்யும் பொழுது:
முதலில் ஆரோக்கியமான சூப் ஆர்டர் கொடுங்க.
முதலில் ஹோட்டலில் உட்காந்தவுடன் பெரிய லிஸ்டாக நீங்களே ஆர்டர் கொடுக்காமல் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சூப் குடித்து கொண்டு கலந்து பேசி முடிவுசெய்து ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்.
நெய்ரோஸ்ட் என்று சொல்லும் பொழுதே அண்ணன் கொஞ்சம் நெய் கம்மியாக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுங்க. தேங்காய் சட்னிக்கு பதில் கொத்தமல்லி,புதினா,கறிவேப்பிலை சட்டினி தாங்க என்று கேளுங்கள்.
காபி,டீ ஆர்டர் செய்யும் பொழுது தேவையான சர்க்கரை அளவை சொல்லிவிடுங்கள்.


நாண்,பரோட்டா,குல்சா,சவர்மா போன்ற மைதா உணவுகளை குறைத்துக்கொண்டு கோதுமை உணவுகளை ஆர்டர் செய்யவும். அல்லது தந்தூரி ரொட்டி சாப்பிடலாம்.
சைவ பிரியர்கள் ஊறுகாயை ஒராம் வைத்துவிட்டு சாப்பிடலாம்.
பனீருக்கு பதிலாக தோஃபு உணவுகளை ஆர்டர் செய்யலாம்
இதை போல் காய்கறிகள் நிறைந்த காய்கறி சப்பாத்தி, காய்கறி ஊட்டப்பம் என்று சாப்பிடவும்.
அசைவ பிரியர்களுக்கு கலர் கலராய் பல உணவுகள் சுண்டி இழுக்கும் அதில் நாம் மிகவும் கவணமாக ஆரோக்கியமான ஐட்டங்களை மட்டுமே சேர்க்கவும்.
பொறித்த சிக்கன்,மீன்,மட்டன் என்று எண்ணெயில் பொறித்த உணவுகளை விட தந்தூரி அடுப்பில் செய்த உணவுகளை ஆர்டர் செய்யவும்.

பிட்ஸா,பர்கர் போன்ற உணவுகளை சிஸ் இல்லாமல் ஆர்டர் செய்யவும்.
என்றோ ஒரு நாள் தானே என்று பார்பதை எல்லாம் வாங்காதிங்க.ஆரோக்கியத்திலும் கவணமாக இருங்க



வெயில் காலங்களில் அதிகமாக தாக்குவது நீர்கடுப்பு தான் அதனை சரிசெய்ய,
நன்றாக மோர், அல்லது தண்ணீர் நிறைய குடிக்கவும்.
இன்னும் அதிகமானால் ஒரு டப்பில் வெதுவதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் நேரம் உட்காரவும். அல்லது தண்ணீரில் முழுகி குளிக்கவும்.
ஒவ்வொருமுறை பாத்ரூம் போனபின்பு, இரவு படுக்கும் முன்பும் வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அந்த இடங்களை அல்சிவிட்டு படுக்கவும்.
பார்லி தண்ணீர், அல்லது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும். உடனே சரியாகும்.
ரொம்ப அதிகமானல் மருத்துவரை அனுகவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்